முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது நிலுவையில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அக். 12-ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அக்டோபர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வெழுத 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.