விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது. சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் உள்ளன. தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மடத்துப்பட்டியில் பட்டாசு ஆலை இன்று வழக்கம் போல் இயங்கி வந்தது. திடீரென பயங்கர சத்ததுடன் 4 முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 60க்கு மேற்பட்டோர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலத்துடன் காட்சி அளிக்கிறது.
Read more: முகத்தில் வீசப்பட்ட செல்போன்.. கண்கலங்கி நின்ற அண்ணாமலை.. பிரச்சாரத்தில் பரபரப்பு..!



