உலகத்தின் முதல் வீரர்..!! சூர்யகுமார் யாதவ் படைத்த புதிய சாதனை..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் 1000 ரன்கள் அடித்து உலகத்தின் முதல் வீரராக சாதனை படைத்துள்ளார், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ்.

தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், உலகத்தின் சிறந்த டி20 அணிகள் எனக் கருதப்படும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டிஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் போன்ற பல்வேறு அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸ்ஸாமை பின்னுக்கு தள்ளி உலக டி20 தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்லின் டி20 போட்டிக்கான அதிரடி அதிக ரன்கள் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

உலகத்தின் முதல் வீரர்..!! சூர்யகுமார் யாதவ் படைத்த புதிய சாதனை..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் களமிறங்கி விளையாடிய சூர்யகுமார், தனது அதிரடி ஆட்டத்தால் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி வெறும் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில்தான் அவர் டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் வேகமாக 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் இடமிருந்து பறித்து தன்வசம் வைத்திருக்கிறார்.

உலகத்தின் முதல் வீரர்..!! சூர்யகுமார் யாதவ் படைத்த புதிய சாதனை..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

டி20 போட்டிகளில் 33 போட்டிகளில் பங்கேற்று ஆடியுள்ள இவர், 9 முறை 50 ரன்கள் விளாசியும், 1 முறை 100 ரன்கள் அடித்தும் 1037 ரன்களுடன் இருக்கிறார். 31 இன்னிங்சில் விளையாடிருக்கும் அவர் 573 பந்துகளை சந்தித்து 1000 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முந்தைய சாதனையாக மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 1000 ரன்கள் அடித்ததே இருந்து வந்தது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை படைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். அடுத்தடுத்த இடங்களில் காலின் முன்ரோ (635 பந்துகள்), எவின் லீவிஸ் ( 640), திசார பெரேரா ( 654 ) பந்துகளில் அடுத்தடுத்து இருக்கின்றனர்.

Chella

Next Post

’சிங்கிள் எடுக்க வேண்டாம்... அடித்து ஆடுங்கள்’..!! கோலியை புகழும் நெட்டிசன்கள்..!! வைரல் வீடியோ

Mon Oct 3 , 2022
தினேஷ் கார்த்திக்கை சிங்கிள் எடுக்க வேண்டாம் எனக்கூறி, தொடர்ந்து அடிக்கும்படி கேட்டுக் கொண்ட விராட் கோலியை, ”தன்னலமற்றவர்” என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இந்திய […]
’சிங்கிள் எடுக்க வேண்டாம்... அடித்து ஆடுங்கள்’..!! கோலியை புகழும் நெட்டிசன்கள்..!! வைரல் வீடியோ

You May Like