தனது தோழியை 3 ஆண் நண்பர்களுக்கு விடிய விடிய விருந்தாக்கிய சம்பவம் கேரளாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த பெண், இந்த மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 ஆண் நண்பர்களும் வந்துள்ளார்கள். மாடல் அழகி தோழிக்கும் அந்த 3 நண்பர்களையும் ஏற்கனவே அறிமுகம் உண்டு. அனைவரும் சேர்ந்து பார்ட்டியில் மது அருந்தியுள்ளனர். மாடல் அழகி ஒருகட்டத்துக்கு மேல் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.. அதனால், அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக சொல்லி, அனைவரும் முன்வந்துள்ளனர். 3 இளைஞர்களும், ஒரு வாகனத்தில் அழகியை ஏற்றிவிடவும், அந்த ராஜஸ்தான் பெண், அவர்களுடன் செல்லாமல் வேண்டுமென்றே அந்த ஓட்டலிலேயே நின்றுவிட்டார்.

அந்த 3 இளைஞர்களும், மயங்கிய அழகியை தார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர். அந்த வாகனத்திலேயே அந்த பெண்ணை 3 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதற்காகவே, கொச்சி சிட்டியில் பல இடங்களில், அந்த வாகனம் விடிய விடிய சுற்றிக் கொண்டே இருந்தது. மாடல் அழகியை ஓடும் காரிலேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, மறுபடியும் ஓட்டலுக்கு சென்ற இளைஞர்கள், அங்கிருந்த, ராஜஸ்தான் தோழியையும் அதே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடுவுக்கு சென்றுள்ளனர். அங்குதான் மாடல் அழகியின் வீடு உள்ளது. விடியும் நேரம் நெருங்கி கொண்டிருக்கும்போது, அவரை வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார் ராஜஸ்தான் தோழி. பிறகு அவர்கள் 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது உடம்பெல்லாம் காயங்களுடன் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்து பதறிப்போய், அவரை உடனடியாக கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக களமசேரியில் உள்ள அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்களும் விசாரணையில் இறங்கி, ராஜஸ்தான் பெண் உட்பட அந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், பார்ட்டி நடந்த அந்த ஹோட்டல் உட்பட பல இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் முதல் குற்றவாளியாக ராஜஸ்தான் பெண்ணை போலீசார் சுட்டிக் காட்டுகின்றனர். அவர்தான் வேண்டும் என்றே திட்டமிட்டு, தன்னுடைய தோழியை, ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கி, இப்படி ஒரு பிளானை செய்துள்ளார். மாடலை அழகியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய பயன்படுத்திய தார் வாகனமும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.