திண்டுக்கல்லை உலுக்கிய ஆணவக்கொலை.. தலைமறைவாக இருந்த மாமியார் மைத்துனன் கைது..!

v

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை அடுத்த, இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டன்


ராமச்சந்திரன், ஆர்த்தி இருவரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதிக்கு பால் கறக்கும் வேலைக்கு மருமகன் ராமச்சந்திரன் சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த மாமனார் சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மருமகன் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர், மாமனார் சந்திரனை கைது செய்தனர். இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இராமநாயக்கன்பட்டியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அவரது உடலை பெற்று அடக்கம் செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சந்திரன் என்பவரது மனைவி அன்புச்செல்வி (39) அவர்களது மகன் ரிவின் (23) ஆகியோரை, நிலக்கோட்டை தனி படை காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more: உங்கள் வீட்டில் காய்கறி வெட்ட பிளாஸ்டிக் போர்டு யூஸ் பண்றீங்களா..? உடனே தூக்கிப் போடுங்க..!! எச்சரிக்கும் மருத்துவர்..!!

English Summary

The honor killing that shook Dindigul.. The mother-in-law’s brother-in-law, who was absconding, was arrested..!

Next Post

உஷார்..!! மழைக்காலம் தொடங்கியாச்சு..!! இந்த தவறையெல்லாம் செய்து ஆபத்தில் சிக்கிடாதீங்க..!!

Fri Oct 17 , 2025
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த முறை வழக்கத்தைவிட மழைப்பொழிவு கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் என்றாலே வெள்ளப்பெருக்கு, மின் துண்டிப்புகள், எதிர்பாராத விபத்துகள், சாலை விபத்துகள் மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். எனினும், சில எளிமையான மற்றும் அத்தியாவசியமான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தச் சிக்கல்கள் அனைத்திலிருந்தும் நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள […]
Rain 2025

You May Like