மனைவியை துண்டு துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்ட காரணத்திற்காக அவரை துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மேற்கு வங்கம் மாநிலம் திலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்ஸ்சாருல். இவரது மனைவி ரேனுகா காத்தூன். இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதியில் இருந்து ரேனுகாவை காணவில்லை என குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கணவர் முகமதுவை பிடித்து காவல்துறை விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. மனைவி ரேனுகாவின் நடத்தை மீது கணவர் முகமதுக்கு சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரேணுகா அழகு பயற்சி வகுப்பில் சேர்ந்து ப்யூடிசியனாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இதனால், பல முன்பின் தெரியாத ஆண்களிடம் இவர் பேசியது கணவர் முகமதுவுக்கு எரிச்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை துண்டு துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

இந்நிலையில், கிறிஸ்துமசுக்கு முந்தைய தினம் மனைவியை தனது பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காவ்வாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்து துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை சாக்குப்பையில் போட்டு மகாநந்தா நதியில் வீசியுள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலையை தொடர்ந்து அதே பாணியில் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வு சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

CHELLA

Next Post

இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

Fri Jan 6 , 2023
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like