நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே பாறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(37). கார் மெக்கானிக் ஆக உள்ளார். இவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நாகராஜூக்கும், எரையம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
நாகராஜூன் கள்ளக்காதலிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதற்கிடையில் நாகராஜ் தனது கள்ளக்காதலியான அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி சின்ன முதலைப்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகராஜூன் மனைவி நெல்லையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், நாகராஜுடன் வாழ்ந்த கள்ளக்காதலி திடீரென 15 நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜ், பாறை தோட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை, நாகராஜ் வீட்டில் உள்ள ஒரு அறையில் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாகராஜை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தினர். தகவல் கிடைத்ததும், வேலகவுண்டம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: FLASH | சென்னையில் அடுத்த பயங்கரம்..!! 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பெரும் பரபரப்பு..!!



