3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! தீபாவளிக்கு முன்பே வரப்போகும் அதிர்ஷ்டம்..!!

Astro 2025 2

தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது.


ஜோதிடத்தின் படி, குரு பகவானின் பெயர்ச்சி ஒரு முக்கியமான நிகழ்வாகும். “குரு பார்த்தால் கோடி நன்மை” என்பது பழமொழி. வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த மாற்றம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவல்லது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். குரு பெயர்ச்சியால் பலன் பெறப்போகும் ராசிகளை இங்கே பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பாதைகள் திறக்கப்படும். நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல சூழல் நிலவும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இது சுபமான காலம். வியாபாரம் தொடர்பான நிதி நெருக்கடிகள் தீரும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரலாம். சில நல்ல செய்திகள் கிடைத்து, உங்கள் மனம் மகிழ்ச்சியடையும்.

சிம்மம்

குருவின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். பணியிடத்தில் எதிர்பாராத வெற்றியை பெறுவீர்கள். கலைத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சில நல்ல செய்திகளும் உங்களை தேடி வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இது பொன்னான நேரம். குருவின் அருளால் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் வேலை இடத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடைவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். புதிய வருவாய் வழிகளும் திறக்கும். வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது நல்ல அதிர்ஷ்டமான நேரம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். வீடு மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

Read More : வீடு கட்டும்போது இந்த தவறை மட்டும் பண்ணிடவே பண்ணிடாதீங்க..!! ஆன்மீகம் சொல்லும் அதிர்ச்சி காரணங்கள்..!!

CHELLA

Next Post

மக்களே வெளியே வராதீங்க...! இன்று திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை...! வானிலை மையம் அலர்ட்...!

Sun Sep 7 , 2025
தமிழகத்​தில் இன்று திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்​ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் […]
cyclone rain 2025

You May Like