நாளை TNPSC தேர்வு…! அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…! முழு உள்ளே…!

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ தேர்வு நாளை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ ஆகிய இருவேளைகளில்‌ பென்னாகரம்‌ வட்டத்தில்‌ உள்ள ஜெயம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ இணையவழி முறையில்‌ நடைபெறவுள்ளது. இதில்‌ மொத்தம்‌ 410 தேர்வர்கள்‌ தேர்வு எழுதவிருக்கின்றனர்‌.


தேர்வு மையத்தில்‌ தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும்‌ முழு அளவில்‌ செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில்‌ பேருந்துகள்‌ நின்று செல்லும்‌ வகையிலும்‌, சிறப்பு பேருந்து ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள்‌ காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லவும்‌, கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும்‌, தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Vignesh

Next Post

பிரபல நடிகை சிகிச்சை பலனின்றி காலமானார்...! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்...!

Sun Dec 25 , 2022
தந்திரம், ஹாதிம் மற்றும் கஹானி கர் கர் கிய் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஜீதா கோச்சார். இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70. கடந்த செப்டம்பர் 2021 இல் நடிகை ராஜீதாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது, இதை அடுத்து தொடர்ந்து அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது […]
8092 rajeeta kocchar

You May Like