நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது .
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் போட்டி இங்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்க்கு 306 ரன்களை எடுத்தது இந்தியா. அதிக பட்சமாக ஷிகர் தவன் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.
பின்னர் விளையாட்டிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் முடிவில் முடிவில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 309 ரன்களை சேர்த்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக டாம் லதாம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 94 ரன்களும் சேர்த்து அதிரடியாக தங்களது ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
2வது ஒருநாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்திலேயே நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஆட்டம் தடையானது.