Alert | உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்..?

rain 1

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது.

இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் அந்தவகையில், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: தொழிலதிபர்களின் மனைவியுடன் உல்லாசம்..!! லட்சணக்கணக்கில் பணத்தை சுருட்டிய குடும்பம்..!! பொண்டாட்டியை வெச்சிக்கிட்டே ஆபாச வீடியோ கால்..!!

Next Post

உங்களுக்கு அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்படுகிறதா?. புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்!. 13 உறுப்புகளை இழந்த பெண்!.

Wed May 28 , 2025
Food poison: பல சமயங்களில் நாம் அறிகுறிகளைப் பார்த்து நோயை மதிப்பிடுகிறோம், மருத்துவரிடம் கூட செல்வதில்லை. இந்தத் தவறு சில நேரங்களில் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். சளி, இருமல் எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அறிகுறிகளைப் பார்த்த பிறகு மெடிக்கலுக்கு சென்று மருந்துகளை வாங்கிச்சென்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை தீவிரமாக இருக்கும்போது கூட, மக்கள் மருத்துவரிடம் செல்வதில்லை. பல நேரங்களில் இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தானவை என்பதை நிரூபிக்கக்கூடும். உண்மையில், இதேபோன்ற […]
UK Women cancer lost 13 organs 11zon

You May Like