எலுமிச்சம் பழம் தானாக சுற்றும் அதிசய பைரவர் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா…?

pairavar

பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும். அந்த கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் பைரவர் வழிபாடு தமிழகத்தில் பெரும் பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் இரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.

இக்கோவில், சித்தர்கள் வழிபடும் இடமாகவும், அருள்வாக்கு வழங்கும் பைரவர் திருத்தலமாகவும் புகழ்பெற்றது. இது இரங்காபுரம் மலைமேல் அமைந்துள்ள சிறிய சன்னதியாக இருந்தாலும், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு விசேஷ நிகழ்வு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

வருடம் ஒரு முறை மட்டுமே இவருக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, அருள் வாக்கு வாங்குவார்கள். மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக மட்டுமல்ல, இப்பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட அந்த நாளில் நடக்கும் அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் இந்த மலைக்கோவிலுக்கு வருவதுண்டு. மே மாதம் நடைபெறும் விழாவின் சிறப்பம்சம் பழம் கொடுப்பது ஆகும். பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்ததும் அவரின் தலையில் பூ வைத்து அதில் ஒரு எலுமிச்சம் பழம் வைப்பார்கள்.

எலுமிச்சை பழத்தை வைத்ததும் சிறிது நேரத்தில் ஒரு “ஈ” அங்கு பறந்து வந்து அந்த எலுமிச்சம் பழத்தில் அமரும். சில விநாடிகள் அமர்ந்துவிட்டு பிறகு பறந்து சென்றுவிடும். அது பறந்து சென்றதும் அந்த பழம் தானாக சுற்றி பிறகு கீழே விழும் அதை ஒருவர் கீழே அமர்ந்து பிடித்துக் கொள்வார். வருடந்தோறும் இந்த அதிசய நிகழ்வு இக்கோவிலில் நடந்து வருகிறது.

பைரவர் தலையில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் தானாக சுற்றும் அதிசய நிகழ்வு நடந்த பிறகு பலருக்கும் இங்கு பைரவரிடம் உத்தரவு பெற்று அருள்வாக்கு கேட்டு சொல்கிறார்கள். பைரவர் உத்தரவுடன் சொல்லப்படும் இந்த அருள்வாக்கால் பல பக்தர்களின் பிரச்சனைகள், மனக்குறைகள் நீங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

Read more: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு..!! அடுத்து என்ன..?

Next Post

கவனம்...! 10 & 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால்டிக்கெட்... நாளை செய்முறைத் தேர்வு...!

Wed Jun 25 , 2025
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் இன்று அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]
School Exam 2025

You May Like