தமிழகத்தை உலுக்கிய ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஆயுள் தண்டனை..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

karur president murder

கரூர் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுபாஷ் (34), 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சுபாஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) இடையே தேர்தல் முன்விரோதம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக 2019ல் ஏற்பட்ட தகராறில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் கொலை செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் பின்னர் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், 2020 ஜூலை 19ம் தேதி மாலை, சுபாஷ் தனது நண்பர்களுடன் நிலத்திற்குச் சென்றபோது, தாமோதரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்டோர் பழிவாங்கும் நோக்கில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வெட்டி கொன்றனர். இந்த கொலை வழக்கில், நெல்லிக்குப்பம் போலீசார் தாமோதரன் உட்பட 12 பேரை கைது செய்தனர். வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை பெற்றது.

விசாரணை முடிவில், நீதிபதி சரஸ்வதி தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ், தமிழ்வாணன், வில்பார், மணிமாறன், தர்மராஜ், தினேஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Read more: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா..! ஆனால்.. மருத்துவர் சொன்ன முக்கிய அப்டேட்..!

English Summary

The murder case of the Panchayat President that shook Tamil Nadu.. 10 people sentenced to life imprisonment..!

Next Post

தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்டும் எலுமிச்சை சாறு..! இப்படி குடித்தால் ஒரு மாசத்துல சிக்குன்னு மாறிடுவீங்க...

Wed Nov 12 , 2025
Lemon juice will get rid of belly fat..!
lemon water 1

You May Like