தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை..!! மனைவி, 4 குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை..!! குடும்பத் தலைவன் தற்கொலை..!!

திருவண்ணாமலை அருகே மனைவி, 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு த்ரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4) ஆகிய 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் இருந்தனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த பழனி, மனைவி உள்ளிட்ட 6 பிள்ளைகளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை..!! மனைவி, 4 குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை..!! குடும்பத் தலைவன் தற்கொலை..!!

மேலும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூமிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், குடும்பத்தையே கொலை செய்து விட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை! அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த மகன் தஞ்சையில் நடந்த கொடூரம்!

Tue Dec 13 , 2022
தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வருமான உண்டியலாக இருப்பது டாஸ்மாக் நிறுவனம்தான் இந்த நிறுவனத்தில் வரும் வருமானத்தை வைத்து தான் தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனம் மூலமாக அரசுக்கு வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கும் தமிழக அரசு, இந்த டாஸ்மாக் நிறுவனத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் துன்பத்தை எப்போதும் கவனத்தில் கொண்டதில்லை. இந்த மதுவின் காரணமாக தான் […]
murder

You May Like