மதுரை மீனாட்சிக்கு இணையான நாயக்கர் கோவில்.. பல தலைமுறை பேசும் சிற்ப சாம்ராஜ்யம்..!! எங்க இருக்கு தெரியுமா..?

temple 1 1

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, அம்மன்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோவில், கோப்பனப்பட்டி பொன்னமராவதி வழித்தடத்தில் சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சுந்தரேஸ்வரர் / சொக்கநாதர், தாயார் மீனாட்சி என அறியப்படுகிறார்.


இக்கோவில் மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்திய தொல்லியல் துறையால் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பதிவுகளின்படி, மதுரையில் மீனாட்சியை வழிபட்டபோல் புதுக்கோட்டையிலும் மீனாட்சியை தரிசிக்க புச்சி நாயக்கர் இந்த ஆலயத்தை கட்டியதாக நம்பப்படுகிறது.

கோவில் அமைப்பு: கோவில் இசை, ஓவியம், நடனம் மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவில், தஞ்சை பெரிய கோவில் போல் சுற்றுப்பிரகாரம் கொண்டுள்ளது. தூண் மண்டபம், உள்பிரகாரத்துடன் இணைக்கப்பட்டு, பலிபீடம், துவஜஸ்தம்பம் மற்றும் நந்தி ஆகியவை கருவறையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் விநாயகர், ஊர்தவ தாண்டவ மூர்த்தி, காளி, வீரபத்திரர், யாளிகள் போன்ற சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கொண்டுள்ளது.
மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் / சொக்கநாதர் சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார். உச்சியில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை கோஷ்ட சிலைகள் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. உள்பிரகாரத்தில் சுப்ரமணியர் சன்னதி அமைந்துள்ளது.

மண்டப சிறப்புகள்:

  • தூண் மண்டபம் அழகுற அமைந்துள்ளது.
  • மண்டபத்தில் நாயக்க மன்னர்கள் மற்றும் அவர்களது அரசிகள் குறித்த சிற்பங்கள் உள்ளன.
  • நுழைவாயிலின் இடதுபுறம் கல்வெட்டுக் கல் பலகை உள்ளது; இது கோவிலுக்கான நாயக்கர் கொடைகள் மற்றும் நிர்வாக விவரங்களை பதிவு செய்கிறது.

Read more: சேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கும் நிலா.. பல்லவனுக்கு வந்த ஜோடி.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!

English Summary

The Nayak temple, which is on par with the Meenakshi temple in Madurai.

Next Post

காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை...! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்...!

Fri Oct 3 , 2025
தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது […]
cyclone rain 2025

You May Like