இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, இன்று வரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரளாவில் 2223 கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், குஜராத்தில் 1223, டெல்லியில் 757, மகாராஷ்டிராவில் 615, தமிழ்நாட்டில் 204, மேற்கு வங்கத்தில் 747, சத்தீஸ்கரில் 44 மற்றும் ஆந்திராவில் 72, ராஜஸ்தானில் 138, கர்நாடகாவில் 459, உத்தரபிரதேசத்தில் 229 வழக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 இறப்புகள் பதிவாகியுள்ளது. கேரளாவில் மூன்று இறப்புகளும், மகாராஷ்டிராவில் ஒரு இறப்பும், கர்நாடகாவில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரமில் இதுவரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கொரோனா குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
JN.1 வகையின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அது மக்களிடையே மிக விரைவாகப் பரவுகிறது. இது செல்களுக்குள் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த உதவும் கூடுதல் பிறழ்வைக் கொண்டுள்ளது. JN.1 வகை அவ்வளவு ஆபத்தானது அல்ல என்றும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் பல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read more: நடிகர் மம்மூட்டி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்..!