“ ‘பத்மஸ்ரீ’, ‘பாரத ரத்னா’ ஆகியவை பட்டங்கள் அல்ல, அவற்றை பெயருக்கு முன் அல்லது பின் பயன்படுத்த முடியாது..” உயர் நீதிமன்றம் அதிரடி..!

transgender andhra court 11zon

உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஒரு மனுவின் வழக்கு தலைப்பில், “பத்மஸ்ரீ”, “பாரத ரத்னா” போன்ற குடிமக்கள் விருதுகள் பெயரின் முன் (prefix) அல்லது பின் (suffix) பட்டமாக பயன்படுத்தப்படுவது தவறு என்றும், அவை எந்த விதத்திலும் பெயரின் ஒரு பகுதியாக எழுதக் கூடாது என்றும் நீதிபதி சோமசேகர் சுந்தரேசன் கூறினார்.


2004-ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சரத் எம். ஹார்டிகர் தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார். அந்த மனுவின் வழக்கு தலைப்பு, டாக்டர் ட்ரிம்பக் வி. தப்கேகர் Vs பத்மஸ்ரீ. டாக்டர் சர்த எம்.ஹர்டிகர் மற்றும் அர்ஸ் (Dr. Trimbak V. Dapkekar vs Padmashree Dr. Sharad M. Hardikar & Ors” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கவனித்த நீதிமன்றம், “இது ஒரு துணை அம்சமாக இருந்தாலும், ஒரு தரப்பினரை வழக்கு தலைப்பில் இப்படியாக குறிப்பிடுவது தவறு என்பதால், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை இங்கு நினைவூட்டுவது இந்த நீதிமன்றத்தின் கடமை” என்று குறிப்பிட்டது.

அதாவது, “பத்மஸ்ரீ”, “பாரத ரத்னா” போன்ற குடிமக்கள் விருதுகள் மரியாதைச் சின்னங்கள் மட்டுமே; அவை சட்டரீதியான பட்டங்கள் அல்ல. எனவே, அவற்றை பெயரின் ஒரு பகுதியாகவோ, முன் அல்லது பின் சேர்த்தோ எழுதுவது சட்டப்படி செல்லாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு அளித்த முக்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. அந்த தீர்ப்பில், பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பாரத ரத்னா போன்ற தேசிய குடியரசு விருதுகள் “பட்டங்கள்” அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதாவது, இவ்விருதுகளை பெற்றவர்கள் தங்களின் பெயருக்கு முன் (prefix) அல்லது பின் (suffix) “பத்மஸ்ரீ டாக்டர் …” “டாக்டர் … பத்மஸ்ரீ” என்று பயன்படுத்தக் கூடாது. மேலும், யாராவது இப்படியாக விருதுகளை பெயருடன் சேர்த்து பயன்படுத்தினால், அந்த நபரிடம் இருந்து அந்த தேசிய விருது திரும்பப் பெறப்படலாம் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதற்காக அந்த விருதுகள் தொடர்பான விதிமுறைகளில் உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதனை நினைவுபடுத்திய மும்பை உயர்நீதிமன்றம், “உச்சநீதிமன்றம் அறிவித்த சட்டத்தை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முன்பே வழங்கிய சட்டத் தீர்ப்புகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா அரசியலமைப்பின் 141-வது பிரிவின் படி, உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் சட்டம் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் கட்டாயம். அதனால் வழக்கில் ஈடுபடும் தரப்புகளும், நீதிமன்றங்களும் அந்த சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

இந்த வழக்கு, புனே இணை தொண்டு ஆணையர் அளித்த ஒரு உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. ஒரு அறக்கட்டளையின் கூட்டம் நடந்த தேதி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. உண்மையில் அந்த கூட்டம் நடைபெற்ற தேதி: 21 ஜனவரி 2016.. ஆனால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட தேதி: 20 ஜனவரி 2016.. இந்த தவறான தேதியை திருத்த அனுமதி தர மறுத்திருந்தார் புனே இணை தொண்டு ஆணையர்.

நீதிமன்றத்தின் முடிவு

உயர் நீதிமன்றம் பதிவுகளை ஆய்வு செய்தபோது, கூட்டம் உண்மையில் 21 ஜனவரி 2016 அன்று நடந்தது என்பதே சரி என்று தெரிய வந்தது. அதனால், “பதிவுகள் கூட்டம் 21 ஜனவரி 2016 அன்று நடந்ததாக காட்டுகின்றன. எனவே அந்த தேதியைத் திருத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று கூறி, தேதி திருத்தத்தை அனுமதித்து மனுவை ஏற்றுக்கொண்டது.

மேலும் “ உச்ச நீதிமன்றம் கூறிய சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். தரப்புகள் மட்டுமல்ல, கீழ் நீதிமன்றங்களும் அந்த சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். இது அரசியலமைப்பின் 141-வது பிரிவின் அடிப்படையில் கட்டாயம். இதுதான் இந்தப் பகுதியின் முழு அர்த்தம்.” என்று தெரிவித்தது..

Read More : இந்தியாவில் எத்தனை பெட்ரோல் பம்புகள் உள்ளன? 99% பேருக்கு இது தெரியாது!

RUPA

Next Post

2026 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பு இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.. செல்வம் சேரும்..!

Fri Dec 26 , 2025
Donate these items before the start of 2026.. Wealth will accrue..!
evening donate

You May Like