HC recalls order listing 90-year-old’s case in 2046, posts hearing on July 15
bombay high court
Woman ‘Not Guilty’ For Husband’s Suicide Over Marital Disputes: Bombay Court
ஒற்றைத் தாயால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைக்கு தனது, பள்ளி பதிவுகளில் தாயின் பெயரும் சாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்று மும்பை நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.. குழந்தையின் நலன் மற்றும் சிறந்த எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் “ ஒரு குழந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத தந்தையின் பெயர் அல்லது சாதியை, கட்டாயமாக பள்ளிப் பதிவுகளில் சேர்க்கச் சொல்வது […]
குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை, பம்பாய் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குறைத்துள்ளது. ஆயுள் தண்டனையாக இருந்த சிறைத் தண்டனை, 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி, காட்கோபார் பகுதியில் வசிக்கும் ஒருவர். 2016 டிசம்பர் மாதத்தில், அண்டை வீட்டில் வசித்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு […]
உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஒரு மனுவின் வழக்கு தலைப்பில், “பத்மஸ்ரீ”, “பாரத ரத்னா” போன்ற குடிமக்கள் விருதுகள் பெயரின் முன் (prefix) அல்லது பின் (suffix) பட்டமாக பயன்படுத்தப்படுவது தவறு என்றும், அவை எந்த விதத்திலும் பெயரின் ஒரு பகுதியாக எழுதக் கூடாது என்றும் நீதிபதி சோமசேகர் சுந்தரேசன் கூறினார். 2004-ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் சேவைக்காக […]
மனைவியின் உடை அல்லது சமையல் திறன் குறித்த கருத்துக்கள் கடுமையான கொடுமை அல்லது துன்புறுத்தலாகாது என்று குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நேற்று ரத்து செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் நீதிபதிகள் […]
திருமண உறவில் ஏற்படும் பிரச்சனையின் போது கூறப்படும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டு அவதூறாகுமா? இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் தன்னை ஆண்மையற்றவள் என்று கூறி தனது நற்பெயரை கெடுத்ததாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.. ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டு, விவாகரத்து அல்லது பராமரிப்பு […]
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜூலை 11, 2006 அன்று, மேற்கு ரயில்வே பாதையில் மும்பையின் புறநகர் ரயில்களில் நெரிசல் நேரத்தில் 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டனர், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்ட […]
மஹாராஷ்டிர மாநிலத்தில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு ஜூனியர் கல்லூரி (FYJC) சேர்க்கைக்கு SC, ST மற்றும் OBC மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சிறுபான்மை நிறுவனங்களில் ஜூனியர் கல்லூரி (FYJC) முதலாமாண்டு சேர்க்கையில் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோருக்கான இடஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து மும்பை […]

