கள்ளக்காதலியை பெண்கேட்டு சென்றவருக்கு அரிவாள் வெட்டு…..! கோவை அருகே பரபரப்பு…..!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்து வரும் வேலையை இவர் செய்து வருகின்றார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு காதணி விழாவில் மேடை அலங்காரம் செய்வதற்காக சென்றார்.


அப்போது அந்த விழாவை நடத்திய திருமணமான 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பெண்ணுக்கு 21 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் இதனை கடுமையாக கண்டித்து இருக்கிறார் இதனால் அவர் வீரக்குமாரிடம் பேசுவதை தவிர்த்தார்.

இத்தகைய சூழ்நிலையில்தான் கடந்த 2020 ஆம் வருடம் வீரகுமாருக்கு திருமணம் முடிவடைந்த நிலையில் மறுபடியும் அந்த 30 வயதான பெண் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் மீண்டும் அந்த பெண்ணை கண்டித்து இருக்கிறார்.

ஆனால் அந்த பெண் வீர குமாருடன் இருந்த கள்ளக்காதலை நிறுத்த மறுப்பு தெரிவித்துவிட்டார். இதற்கு நடுவே தன்னுடைய கணவரின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து வீரகுமாரின் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய கணவரை கண்டித்து இருக்கிறார். ஆனால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, அவர் தன்னுடைய கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதேபோல் வீர குமாருக்கு அந்த 30 வயது பெண்ணின் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வடவள்ளி அருகே இருக்கின்ற ஆண்டிபாளையத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த சூழ்நிலையில், அந்த பெண் தன்னுடைய பெற்றோரிடம் வீரக்குமாரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண்ணின் பெற்றோர் அப்படி எல்லாம் செய்ய முடியாது எனவும், கணவுடன் சேர்ந்து வாழுமாறும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண் வீரக்குமாரை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே வீரகுமார் உடனடியாக தன்னுடன் வேலை பார்க்கும் 2 நபர்களுடன் ஆண்டிப்பாளையத்தில் இருக்கின்ற அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டு இருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அந்த பெண்ணின் தாய், தந்தை வீட்டில் இருந்து அறிவால் ஒன்றை எடுத்து வந்து வீரக்குமாரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அவருடன் இருந்த 2 பேர் மீட்டு கோவையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் அந்த பெண்ணின் தாய் தந்தை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

அடச்ச நீ எல்லாம் ஒரு தாயா….? காம வெறியால் 3 வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி…..!

Wed Jun 21 , 2023
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வபிரகாசம் (27) இவரது மனைவி லாவண்யா (25) இந்த தம்பதிகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மாங்காடு அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு சர்வேஸ்வரன்(3) என்ற மகனும் இருந்தார். இதற்கு நடுவே கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சர்வேஸ்வரன் தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். இந்த […]
lavanya sarveswaran

You May Like