14 வயது சிறுமியை நாசம் செய்த நபர்..!! கொதித்தெழுந்த மக்கள்..!! திணறிய போலீஸ்..!! கல்வீசி தாக்குதல்..!! கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்னர் திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். உடனே பெற்றோரும், உறவினர்களும் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, செந்திலை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி- ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார், மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தற்போது கலைந்து செல்லுமாறும் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்றைய தினம் ஆத்திரமடைந்த உறவினர்கள் செந்திலின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை தடுத்து கலைந்து போக செய்தனர்.

CHELLA

Next Post

பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த மின் கட்டண உயர்வு..!! ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89..!! நுகர்வோர்கள் அதிர்ச்சி..!!

Tue Jun 6 , 2023
கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மின்சார கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மேல் ஒரு யூனிட்டிற்கு ரூ.2.89 ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 200 யூனிட் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் 89 காசுகள் […]
27THMETERNEW272417756ajpg

You May Like