மகளையும் தாயையும் ஒரே நேரத்தில் காதலித்த நபர்.. கொலையில் நடந்த ட்விஸ்ட்!!

தூத்துக்குடியில்  ஒரே நேரத்தில் தாயையும் ,அவரின் மகளையும் காதலித்த நபருக்காக கட்டிய கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை என்ற பகுதியை அடுத்துள்ளது அச்சங்குளம் என்ற கிராமம் . இக்கிராமத்தில் காட்டுப்பகுதி உள்ளது. அங்கு எரிந்த நிலையில் சடலத்தை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். எரிந்த உடலில் வெட்டுக்காயங்கள் கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் யார் என விசாரணை நடத்தினர். அப்போது குருவி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞான சேகர் என்பது தெரியவந்தது.

அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஞான சேகரும் அவரது மனைவி சைத்ராணியும் , 14 , 15 வயதில் 2 மகள்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் பதில் அளித்தனர். இதனால் போலிசுக்கு சந்தேகம் வந்தது. ஒவ்வொருவரையும் காவல் நிலையத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது கருப்பசாமி என்பவருடன் சேர்ந்து கணவன் ஞான சேகரனை கொலை செய்தது தெரியவந்தது. ஏன் கொலை செய்தார்கள் என்பதை விசாரித்தனர். ஞான சேகர் அப்பகுதியில் மீன் வியாரியாக இருந்தவர். இரவில் மீன் வாங்கி வந்து பகலில் இருசக்கர வாகனம் மூலம் மீன் விற்று வந்துள்ளார். கருப்பசாமிக்கும் சைலத்ராணிக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனால் ஞானசேகர் இரவு நேரத்தில் வெளியில் செல்லும் போது இருவரும் உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே அதே கருப்பசாமி , சைலத்ராணியின் மூத்த மகளுடன் பழகி இருவரும் காதலித்து வந்தனர். ஒரு வீட்டில் தாயுடன் உல்லாசம். பகலில் மகளுடன் நெருக்கம் என கருப்பசாமி இருவரையும் மாறி மாறி காதல் மழையில் நனைய வைத்துள்ளார். இது சைலத்ராணிக்கு தெரிந்துவிட்டது. இது பற்றி கேட்டதற்கு உன் மகளை நான் திருமணம் செய்து கொள்கின்றேன். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை . உன்னுடன் நெருக்கமாக இருக்க முடியும் என கூறியுள்ளார். ‘

இந்நிலையில் சைலத்ராணி கருப்பசாமியுடன் இருந்ததை ஞானசேகரன் பாத்துவிட்டார். இது பற்றி எச்சரித்துள்ளார். ஆனால் மகளிடம் சென்று உன் காதல் விவகாரம் தெரிந்துவிட்டது. அவர் இருக்கும் வரை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் இருவரும் சேர்ந்து அப்பாவை கொன்று விடுவோம் என மூளை சலவை செய்துள்ளார். இதனால் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஞான சேகரனை கம்பியால் அடித்துக் கொன்று இருவரும் சேர்ந்து பிணத்தை சாக்கு பையில் கட்டி கொண்டு சென்று காட்டுப்பகுதியில் எரித்துவிட்டனர்.

இருவரும் கொலையை ஒப்புக் கொண்டதால் மூன்று பேரையும் வெவ்வேறு சிறையில் அடைத்துள்ளனர்.

Next Post

’’அனைத்து டார்கெட்டும் ஹிட்’’ .. ட்ரோன் தாக்குதலுக்குப் பின் ரஷ்யா கூறிய தகவல் …

Mon Oct 17 , 2022
ரஷ்ய ஆயுதப்படைகள்  நீண்ட இலக்கை கொண்டு போர் நடத்தி வந்தது.. ராணுவ கட்டளைக்கேற்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது.  ஏவுகனைகள் , ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இன்று ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டது. இதையடுத்து ’’ கொடுக்கப்பட்ட டார்கெட்டுகள் அனைத்தும் வெற்றி’’ என குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடத்தை காலி செய்ய தீயணைப்பு வீரர்கள் அறிவித்ததால் அப்பகுதியில் மக்கள் அந்த இடத்தை […]

You May Like