அமுல் நிறுவனம் மீண்டும் பால் விலையை உயர்த்தி உள்ளது..
இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அதன்படி, குஜராத்தில் அமுல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.. அகமதாபாத் மற்றும் சௌராஷ்டிரா-கட்ச் சந்தைகளில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளன என்று கூட்டுறவு பிராண்டை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMF) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சந்தைகளில் அமுல் கோல்டின் விலை ரூ.32 ஆகவும், அமுல் தாசா ரூ.26 ஆகவும், அமுல் சக்தி ரூ.29 ஆகவும் இருக்கும். கடந்த ஆண்டை விட மாட்டுத் தீவனத்தின் விலை 13-14 சதவீதம் அதிகரித்ததால், விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக அமுல் விளக்கம் அளித்துள்ளது. எனவே ஒட்டுமொத்த செலவினங்களின் அதிகரிப்பு விலை காரணமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..