அமுல் பால் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

அமுல் நிறுவனம் மீண்டும் பால் விலையை உயர்த்தி உள்ளது..

இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அதன்படி, குஜராத்தில் அமுல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.. அகமதாபாத் மற்றும் சௌராஷ்டிரா-கட்ச் சந்தைகளில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளன என்று கூட்டுறவு பிராண்டை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMF) அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த சந்தைகளில் அமுல் கோல்டின் விலை ரூ.32 ஆகவும், அமுல் தாசா ரூ.26 ஆகவும், அமுல் சக்தி ரூ.29 ஆகவும் இருக்கும். கடந்த ஆண்டை விட மாட்டுத் தீவனத்தின் விலை 13-14 சதவீதம் அதிகரித்ததால், விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக அமுல் விளக்கம் அளித்துள்ளது. எனவே ஒட்டுமொத்த செலவினங்களின் அதிகரிப்பு விலை காரணமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

1newsnationuser1

Next Post

சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்..? சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்..

Sat Apr 1 , 2023
சுங்கக்கட்டணம் உயர்வு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்து பேசினார்.. தமிழ்நாட்டில் தற்போது மொத்த 55 சுங்கச்சாவடிகள் உள்ளது.. இதில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.. ரூ.10 முதல் ரூ.60 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. காருக்கு ரூ.60லிருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்திற்கு ரூ.105லிருந்து, ரூ.115ஆகவும் உயர்ந்துள்ளது.. அதே போல் லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-ல் இருந்து […]
1173397 toll plaza

You May Like