’பாபா’ படத்தின் ரீ ரிலீசால் ஜெயிலர் படத்திற்கு சிக்கல்..!! ’ரஜினி யோசிக்காம இந்த வேலைய பண்ணிட்டாரே’..!!

20 வருடத்திற்கு முன்பு வெளியாகி வெற்றிபெறாத பாபா திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்வதால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறைய வாய்ப்புள்ளது.


ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

’பாபா’ படத்தின் ரீ ரிலீசால் ஜெயிலர் படத்திற்கு சிக்கல்..!! ’ரஜினி யோசிக்காம இந்த வேலைய பண்ணிட்டாரே’..!!

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். அதில், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லால் சலாம் என பெயரிடப்பட்ட இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

’பாபா’ படத்தின் ரீ ரிலீசால் ஜெயிலர் படத்திற்கு சிக்கல்..!! ’ரஜினி யோசிக்காம இந்த வேலைய பண்ணிட்டாரே’..!!

இதற்கிடையே, ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002இல் வெளியான திரைப்படம் பாபா. ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது எடிட் செய்யப்பட்டு மறுவெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அநேகமாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’பாபா’ படத்தின் ரீ ரிலீசால் ஜெயிலர் படத்திற்கு சிக்கல்..!! ’ரஜினி யோசிக்காம இந்த வேலைய பண்ணிட்டாரே’..!!

இந்நிலையில் பாபா திரைப்படம் மறுவெளியீடு செய்வதினால் ரஜினிக்கு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது ”சமீபகாலமாக ரஜினியின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தை தான் அவர் மலைபோல் நம்பியுள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினியின் லுக் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 20 வருடத்திற்கு முன்பு வெளியாகி வெற்றிபெறாத பாபா திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்வதால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறையவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இது ரஜினிக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக அமையும்” என்றார்.

CHELLA

Next Post

பயங்கர ஷாக்..!! ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு..!! சிஎஸ்கே வீரர் பிராவோ அறிவிப்பு..!!

Fri Dec 2 , 2022
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்களை வெளியேற்றியது. இதில், பிராவோ வெளியேற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனெனில், இன்னும் அவர் முழு […]
பயங்கர ஷாக்..!! ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு..!! சிஎஸ்கே வீரர் பிராவோ அறிவிப்பு..!!

You May Like