4 மணி நேரம் மாறி மாறி மாணவியை சீரழித்த காமக் கொடூரர்கள்.. குலை நடுங்க வைக்கும் பகீர் தகவல்..

gang rape

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்‌. காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.. காரில் இருந்த மாணவியை 300 மீ தொலைவில் உள்ள மோட்டார் ரூமுக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இரவு 11 மணி தொடங்கி அதிகாலை சுமார் 3.30 மணி வரை காமக் கொடூரர்கள் மூவரும் மாறி மாறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அந்த மாணவி இந்த கொடுந்துயரத்தை அனுபவித்து வந்துள்ளார்,

பின்னர் அந்த மாணவி அணிந்திருந்த தங்கக் கம்மலை பிடுங்கிக் கொண்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது எனவும், ஆடைகளின்றி இருந்த மாணவியிடம் சட்டையை கொடுத்து நகைத் திருட்டு என்று கூற வேண்டும் என மிரட்டி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன் பின்னரே போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.. ஏற்கனவே மாணவி உடனிருந்த  ஆண் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்த நிலையில் அதிகாலையில் தான் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..

அந்த 3 பேரும் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், வாகனத்தை கண்டுபிடிக்க முடியாததால் மூவரும் தப்பி ஓடிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.. தற்போது இந்த காமக் கொடூரர்கள் மூவரும் போலீசார் சுட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. முழுமையான விசாரணை நிறைவடைந்த பின்னரே விரிவான தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது..

Read More : “காது கேட்காது.. வாய் பேச முடியாது”..!! 13 ஆண்டுகளாக நரக வேதனை..!! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைகோ ஆசிரியர்..!!

RUPA

Next Post

தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து சீரியல் நடிகைக்கு அனுப்பி வைத்த மேலாளர்..!! பதிலுக்கு அவர் செய்த தரமான சம்பவம்..!!

Tue Nov 4 , 2025
பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் 41 வயது நடிகை ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடிகைக்கு ‘Naveenz’ என்ற பெயரில் ஃபேஸ்புக் மூலம் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் வந்துள்ளது. அந்த நபர் யார் என்று தெரியாததால் நடிகை அதனை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், அந்த நபர் மெசஞ்சர் வழியாக நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், […]
porn video woman

You May Like