சுனை நீரில் மூழ்கிய சிவலிங்கம்.. வருடத்தில் ஒருமுறை மட்டுமே தரிசிக்கலாம்..! புதுக்கோட்டையில் இப்படி ஒரு கோவிலா..?

Bhushavali My Travelogue Vijayalacholeeswararam Pudukottai 3

புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று செழுமை, இயற்கை அதிசயங்கள் மற்றும் அற்புதமான சிற்பக்கலைகளால் நிரம்பிய புனிதத் தலங்களின் மையமாகத் திகழ்கிறது. குடைவரைக் கோவில்கள், பல நூற்றாண்டுகள் பழமையான குகை ஓவியங்கள், சிற்பங்கள், கோட்டைகள், கோவில்கள் என எண்ணற்ற சுவடுகளை மறைத்து நிற்கும் இந்த மாவட்டத்தில், நார்த்தாமலையில் இருக்கும் ‘நீருக்குள் மூழ்கிய சிவலிங்கம்’ சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் கவரும் சிறப்பு தலமாக உள்ளது.


புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள நார்த்தாமலை, ஒன்பது சிறிய மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை மற்றும் பொன்மலை ஆகிய மலைத் தொடர்கள் இப்பகுதியின் சான்றுகளாக நிற்கின்றன. ஒரு நாள் சுற்றுலாவுக்கு இந்த பகுதி சிறந்த இடமாக அமைகிறது.

மேலமலைக்கு செல்லும் பாதையில், தலையருவி சிங்கம் சுனை என்ற இடம் உள்ளது. இதன் ஆழம் சுமார் 15 அடியாகும். இந்த சுனையின் உள்ளேதான் மிகப் பிரசித்தியான ஜீரஹரேஸ்வரர் குடைவரைக் கோவில் அமைந்துள்ளது. கல்லில் செதுக்கப்பட்ட அழகிய சிவலிங்கம் இங்கு நீருக்குள் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.

சுனையின் பள்ளத்தில் இறங்கிச் சென்றாலே இந்த குடைவரைப் பகுதி அணுக முடியும். இங்குள்ள கல்வெட்டுகள் இடத்தின் தொன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, 1857ஆம் ஆண்டு ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணி இந்த சுனையில் நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுனை பெரும்பாலும் தண்ணீரால் நிரம்பியிருப்பதால், இங்கு இப்படியான அரிய கோவில் இருப்பது பலருக்கும் தெரியாமல் போகிறது. இதனால், ஆண்டுதோறும் உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி, சுனையில் தேங்கிய நீரை மோட்டார்களின் மூலம் வெளியேற்றி, சிவராத்திரி நாளில் எளிய விழா முறையில் சிவலிங்கத்தை தரிசித்து வழிபடுவது இப்பகுதியின் சிறப்பு.புதுக்கோட்டையின் மறைந்து போன வரலாறுகளை வெளிச்சம் போடும் இந்த நீருக்குள் இருக்கும் சிவலிங்கம், இயற்கை, ஆன்மிகம், வரலாறு மூன்றையும் ஒரொன்றாக இணைக்கும் மெய்யான அற்புதம்.

Read more: அசிங்கமான அவதூறு வார்த்தைகள்.. மாணவியின் புகார்களை கண்டுகொள்ளாத ஆசிரியைகள்.. CBSE விசாரணையில் பகீர் தகவல்..

English Summary

The Shivalinga submerged in the water of the Sunai River.. can only be visited once a year..! Is there a temple like this in Pudukkottai..?

Next Post

11 மாவட்டங்களில் கனமழை... 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Sat Nov 22 , 2025
தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]
heavy rain

You May Like