நெஞ்சே பதறுதே.. 3 பெண் பிள்ளைகளை அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை..!! நாமக்கல்லில் பரபரப்பு..

rasipuram murder

ராசிபுரம் அருகே 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் திடீரென தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ(9), ரித்திகாஸ்ரீ(7), தேவஸ்ரீ(3) ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவர் விஷம்குடித்து தற்கொலை செய்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடன் சுமையே காரணம் எனக் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் நான்கு உயிர்கள் இழந்த இந்த சம்பவம், அந்த  பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more: பீட்ரூட் ஜூஸ் நல்லது தான்.. ஆனால் இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கவே கூடாது..!!

English Summary

The shocking incident of a father killing his three children with a machete and then committing suicide has left many shocked.

Next Post

அடுத்த 10 ஆண்டுகளில் AI மனிதகுலத்தை அழித்துவிடுமா? அது எப்படி நடக்கும்? மிரள வைக்கும் ஆய்வுக்கட்டுரை..

Tue Aug 5 , 2025
செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]
AI will likely take over the world 1200x900 1

You May Like