கர்நாடகாவில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரின் உதட்டை கொத்திய பாம்பு புதருக்குள் மறைந்தது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பத்ராவதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு நுழைந்துவிட்டது.இதனால் பாம்புபிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த அலெக்ஸ் என்ற பாம்பு பிடி இளைஞர் பாம்பை பிடித்தார். பின்னர் அனைவர் முன்பும கெத்துகாட்ட நினைத்தார். அதற்கு முத்தம் கொடுப்பது போல வீடியோ எடுக்க முயன்றார். தனது வாயை குவித்துக் கொண்டு பாம்பின் அருகே சென்றதும் அதன் வாயை குவித்துக் கொண்டு ஒரே கொத்தாக கொத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகின்றது.
உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் கொடுத்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.