இதெல்லாம் நமக்கு தேவையா : முத்தம் கொடுக்க வந்தவரின் உதட்டை பதம்பார்த்த பாம்பு….

கர்நாடகாவில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற  நபரின் உதட்டை கொத்திய பாம்பு புதருக்குள் மறைந்தது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பத்ராவதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு நுழைந்துவிட்டது.இதனால் பாம்புபிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த அலெக்ஸ் என்ற பாம்பு பிடி இளைஞர் பாம்பை பிடித்தார். பின்னர் அனைவர் முன்பும கெத்துகாட்ட நினைத்தார். அதற்கு முத்தம் கொடுப்பது போல வீடியோ எடுக்க முயன்றார். தனது வாயை குவித்துக் கொண்டு பாம்பின் அருகே சென்றதும் அதன் வாயை குவித்துக் கொண்டு ஒரே கொத்தாக கொத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகின்றது.


உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் கொடுத்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Next Post

ஏர்போர்ட்டில் கிளீனிங் மாப்பில் தங்க பசை; சி.ஐ.எஸ்.எப் வீரரிடம் வசமாக சிக்கிய ஒப்பந்த பணியாளர்.. பரபரப்பு..!!

Sat Oct 1 , 2022
சென்னை ஏர்போர்ட்டில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் இரண்டு கிலோ தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்த தொழிலாலியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப்பை பார்த்து சந்தேகமடைந்த சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர், மாப்பின் கைப்பிடிக்குழாயை கழட்டி காட்ட சொல்லி சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கைப்பிடிக்குழாய்க்குள் 78 லட்சம் மதிப்புள்ள […]
Untitled 3

You May Like