புதிய வழிகாட்டுதல்.. இனி கட்டாயம் பின்பற்ற வேண்டும்..! மாநில திட்ட இயக்குநர் அதிரடி உத்தரவு…!

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு, உறுப்பினர் மாற்றங்கள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்களை மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் .

அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 – ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்பட்டது. அதன் படி, பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் , பள்ளி வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 – இன்படி உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவானது மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசித்து குழந்தைகள் கல்வி மற்றும் பள்ளியின் வளர்ச்சி சார்ந்தத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.


பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களை அனைத்து உறுப்பினர்களின் முழுமையானப் பங்கேற்புடன் நடத்திடவும், உறுப்பினர்களின் வருகை மற்றும் தவிர்க்கவியலாத மாற்றங்கள் சார்ந்து முடிவுகள் எடுக்கவும் , பள்ளியின் நிதி நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையிலும் கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

IMG 20230714 054220
IMG 20230714 054243
IMG 20230714 054259

Vignesh

Next Post

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று “கல்வி வளர்ச்சி” நாள் கொண்டாட வேண்டும்…! அரசு உத்தரவு…

Fri Jul 14 , 2023
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ இன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்விக்கண்‌ திறந்த காமராசர்‌ அவர்களின்‌ […]
school 1

You May Like