நகரங்களில் வெளியே காலடி எடுத்து வைத்தாலே வெப்பம் அதிகமாகவும், கனமாகவும் உணரப்படுவது சாதாரண விஷயம் அல்ல. கிராமப்புறங்களை விட நகரங்கள் வேகமாக வெப்பமடைந்து வருவது தற்போது மருத்துவர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, அதிகரித்த வெப்பம் காரணமாக வெப்ப அழுத்தம், நீரிழப்பு, சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் நகரங்கள் வடிவமைக்கப்படும் விதமே என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது Urban Heat Island Effect (UHI) எனப்படும் நிகழ்வாகும். நகரங்களில் கான்கிரீட் கட்டிடங்கள், தார் சாலைகள் அதிகமாக இருப்பதாலும், மரங்கள் மற்றும் பசுமை குறைவாக இருப்பதாலும் வெப்பம் அதிகமாக உறிஞ்சப்பட்டு நீண்ட நேரம் தங்கி விடுகிறது.
அதனால், பகலில் சேரும் வெப்பம் இரவிலும் முழுமையாக குறையாமல் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெப்பநிலையில் 3 முதல் 4 டிகிரி வரை கூடும் இந்த மாற்றம் சிறியது போல தோன்றினாலும், அது உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்:
அதிக வெப்பம் பல தீவிரமான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
வெப்பத்தாக்கம் (Heat Stroke): உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும் ஆபத்தான நிலை
வெப்பச் சோர்வு (Heat Exhaustion): அதிக வியர்வை மூலம் நீர் மற்றும் உப்பு இழப்பு
ராப்டோமயோலிசிஸ் (Rhabdomyolysis): தசை சிதைவு, சிறுநீரக பாதிப்பு
இதயம், நுரையீரல், நீரிழிவு மற்றும் மனநலப் பிரச்சினைகளும் மோசமடையும் அபாயம்
பாதுகாப்பு எப்படி? சில எளிய பழக்கங்கள் மூலம் இந்த வெப்ப தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
* தாகமாக இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
* காஃபீன், மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.
* பிற்பகல் கடும் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
* இலேசான, காற்றோட்டமான உடைகள் அணிய வேண்டும்.
* தொப்பி, குடை, சன்கிளாஸ் பயன்படுத்தலாம்.
* தலைவலி, சோர்வு, குமட்டல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது.
Read more: மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. 81 ஆயிரம் சம்பளம்..! நல்ல சான்ஸ்.. விட்றாதீங்க!



