ஓய்வூதியர்கள் கவனத்திற்கு..! ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் புதிய நடைமுறை…! தமிழக அரசு அதிரடி…!

ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச்‌ சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள்‌ தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச்‌ சான்றை அளிக்க ஆண்டுதோறும்‌ ஜூலை முதல்‌ செப்டம்பர்‌ வரை மூன்று மாதங்கள்‌ அவகாசம்‌ அளிக்கப்படும்‌. இணைய சேவை மையங்கள்‌, அஞ்சல்‌ வழி, கருவூலகணக்குத்‌ துறையில்‌ நேரடியாக சமர்ப்பித்தல்‌ உள்ளிட்ட வழிகளில்‌ வாழ்வுச்‌ சான்றிதழை அளிக்கலாம்‌. உயிர்‌வாழ்வுச்‌ சான்றை அளிக்க வெவ்வேறு முறைகளில்‌ வசதிகள்‌ இருந்தாலும்‌,ஜூலை முதல்‌ ஆகஸ்ட்‌ என்ற கால அளவு தொடர்ந்து நடைமுறையிலிருந்து வருகிறது. வெளிநாட்டில்‌ வசிக்கும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ அந்நாட்டிலுள்ள மாஜிஸ்டிரேட்‌, நோட்டரி, வங்கி மேலாளர்‌அல்லது இந்தியத்‌ தூதரக அதிகாரியிடம்‌ வாழ்வுச்சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்‌.


வருமானவரி செலுத்த வேண்டியவர்கள்‌ நடப்பு நிதியாண்டுக்கான தோராயமானவருமான வரி அறிக்கையினை, ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகத்துக்குஅனுப்ப வேண்டும்‌. ஓய்வூதியம்‌ வழங்கும்‌ பணி கணினிமயமாக்கப்படுவதால்‌, தகவல்‌ தொடர்பிற்கும்‌, வருமான வரி பிடித்தம்‌குறித்த விபரங்களைத்‌ தாக்கல்‌ செய்வதற்கும்‌ வசதியாக தற்போதைய இருப்பிட முகவரி, தொலைபேசி, கைபேசிஎண்‌, மின்னஞ்சல்‌ முகவரி, வருமான வரிகணக்கு எண்‌ ஆகிய விபரங்களையும்‌ அளிக்க வேண்டும்.

ஓய்வூதியதாரர்களிடம்‌ ஆண்டு முழுவதும்‌நேர்காணல்‌ நடத்தி உயிர்‌ வாழ்வை உறுதிசெய்ய வழி செய்யப்படும்‌ என்று தமிழகஅரசு சட்டப்பேரவையில்‌ அறிவித்தது. ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும்‌ சிரமங்களைக்‌ கருத்தில் கொண்டு, ஒவ்வோரு ஆண்டும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ ஓய்வு பெறும்‌ மாதத்தில்‌ நேர்காணல்‌ நடத்தப்படும்‌ என்றும்‌, இந்த புதிய நடைமுறை ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இன்டர் மியாமி கிளப்பில் இணைகிறார் மெஸ்ஸி!... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Fri Jun 9 , 2023
உலக கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி கிளப்பில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கால்பந்து கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது இன்டர் மியாமி அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்டர் மியாமி கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இண்டர் மியாமிக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸியின் முடிவு குறித்து பார்சிலோனாவின் […]

You May Like