பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் ஜார்கண்ட் மாநிலத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிங்கம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் தான் 8 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் பள்ளிக்குப் பக்கத்தில் புதர் அருகே அந்த 8 வயது மாணவியை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்திருக்கிறார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து தலைமை ஆசிரியரை கண்டித்ததுடன், கடுமையாக திட்டி அந்த சிறுமியை காப்பாற்றி இருக்கிறார்.
பின் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டிருக்கிறது அவர்கள் வந்து அந்த மாணவியிடம் கேட்கும்போது அவர் தலைமை ஆசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதை வெளியே சொல்ல கூடாது என்றும் தன்னை மிரட்டியதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதை அறிந்த அந்த கிராம மக்கள் மற்றும் அந்த மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரை பள்ளிக்குச் சென்று கடும் விமர்சனம் செய்து அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர்.
இதை அறிந்த காவல்துறை உடனடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.