சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதி விரைவு ரயில் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோரமண்டல் ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது, இரவு 7 மணியளவில்ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோரமண்டல் ரயில் up-line வழித்தடத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் Down-line-ல் சென்ற பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில், தடம்புரண்டு விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கோரமண்டல் ரயிலின் என்ஜின், மற்றும் A1,A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9, H1ஆகிய பெட்டிகள் தடம் புரண்டது. விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளதாக, ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியதாக கூறப்படுகிறது.

மேலும் ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பாலசோர் மருத்துவமனை, கோபால்பூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில், ரத்த தானம் செய்யா ஏராளமான மக்கள் இரவிலிருந்து தற்போது வரை குவிந்து வருகின்றனர். ரத்த தானம் செய்ய வந்த மக்களின் மனித நேயத்தை நாடே கண்டு வியந்து வருகிறது, ஒரு பக்கம் கோரா விபத்து மறுபுறம் மனித நேயம் எண்று கண்களில் இருந்து கண்ணீர் வரவைக்கிறது.
மேலும் ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ஒடிசா முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் அமைக்கப்ட்டுள்ள கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.