நாட்டையே உலுக்கும் ரயில் விபத்து…. மனித நேயத்தை நிலை நாட்டும் மக்கள்..! கண்களில் கண்ணீர் வரவைக்கும் ஒடிசா சம்பவம்…

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதி விரைவு ரயில் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோரமண்டல் ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது, இரவு 7 மணியளவில்ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோரமண்டல் ரயில் up-line வழித்தடத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் Down-line-ல் சென்ற பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில், தடம்புரண்டு விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் கோரமண்டல் ரயிலின் என்ஜின், மற்றும் A1,A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9, H1ஆகிய பெட்டிகள் தடம் புரண்டது. விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளதாக, ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியதாக கூறப்படுகிறது.

train accident

மேலும் ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பாலசோர் மருத்துவமனை, கோபால்பூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில், ரத்த தானம் செய்யா ஏராளமான மக்கள் இரவிலிருந்து தற்போது வரை குவிந்து வருகின்றனர். ரத்த தானம் செய்ய வந்த மக்களின் மனித நேயத்தை நாடே கண்டு வியந்து வருகிறது, ஒரு பக்கம் கோரா விபத்து மறுபுறம் மனித நேயம் எண்று கண்களில் இருந்து கண்ணீர் வரவைக்கிறது.

மேலும் ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ஒடிசா முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் அமைக்கப்ட்டுள்ள கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

Newsnation_Admin

Next Post

சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் அதிரடி கைது…..!

Sat Jun 3 , 2023
சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் மீது 15 வயது சிறுமி வருவதற்கு பாலியல் தொல்லையை வழங்கியதாக தேவகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. இதில் நாச்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு சிலர் பேச்சுவார்த்தை நடத்தி 50 லட்சம் ரூபாய் வரையில் அவரிடம் பணம் வாங்கி உள்ளனர். அதோடு பணம் கேட்டு மிரட்டியும் வந்துள்ளனர். இதற்கு நடுவே அவர் மீது வழக்கு பதிவு […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like