வெளுத்து வாங்கிய கனமழையால் முறிந்து விழுந்த மரங்கள்….! ஸ்தம்பித்து போன போக்குவரத்து சீர் செய்த காவல்துறை…..!

தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதே நேரம் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்


சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆகவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணி ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Post

அக்னி நட்சத்திரம் நிறைவடைவதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை!

Sun May 28 , 2023
அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்தது இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, நேற்று இரவு 7 மணியளவில் முதல் […]
thiruvannamali

You May Like