தொடர்ந்து ஆண் நண்பருடன் போனில் பேசிய மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்…

உத்தரப்பிரதேச மாநிலம் கேதன் விஹாரில் வசித்து வரும் குல்வந்த் சிங் வயது 50 இவரின் மனைவி புஷ்பா சிங்வயது 38. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இளைய மகன், தனது நண்பரின் வீட்டிற்குச்சென்றுள்ளார். பின், மாலை வீடு திரும்பி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய் புஷ்பா சிங் தலை உடைக்கப்பட்டு கீழே சடலமாகக் கிடப்பதையும், தந்தை குல்வந்த் சிங் தூக்கிட்டுத்தற்கொலைசெய்து சடலமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


தகவல் அறிந்தவுடன் சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு சடலங்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துணை ஆணையர் சிரஞ்சீவ் நத் சின்ஹா கூறுகையில், “அவர்களின் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில், புஷ்பா சிங் அதிகநேரம் செல்போனில் ஆண் நண்பருடன் பேசுவதால், கணவன் – மனைவியிடையே வாக்குவாதங்கள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரின் வாக்குவாதம் முற்றியதில், குல்வந்த் சிங் புஷ்பா சிங்கை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Newsnation_Admin

Next Post

மர்ம தேசம் , ஜீ பூம்பா சீரியல்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்கொலை ! .. என்ன காரணம் ?  

Wed Oct 5 , 2022
மர்ம தேசம் , ஜீ பூம்பா போன்ற மர்ம தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ் தற்கொலையால் திரை உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் கடந்த அக்டோபர் 2ம் தேதி மயங்கியநிலையில் லோகேஷ் கிடந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை் பரிசோதித்தபோது தற்கொலை முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]
மர்ம தேசம்

You May Like