நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த கூட்டத்டொடர் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் “நல்ல பயனுள்ள” ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.”
“எங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறேன்,” என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
Read More : திருமணமாகாத கிறிஸ்தவ மகள், தந்தையிடம் இருந்து பராமரிப்பு கோர முடியாது: கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!



