உலகின் மிகப்பெரிய வீடு.. ரூ.24,000 கோடி மதிப்பு, பக்கிங்ஹாம் அரண்மனையை விட 36 மடங்கு பெரியது! இந்தியாவில் தான் இருக்கு!

Lakshmi Vilas world largest home

உலகின் மிகப்பெரிய தனியார் இல்லம் எங்கு அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது துருக்கியின் வெள்ளை அரண்மனையை விட 10 மடங்கு பெரியது, லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட 36 மடங்கு பெரியது. இந்த அரண்மனை இந்தியாவில் தான் அமைந்துள்ளது.. 30.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாகும். குஜராத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்த அரண்மனை 1890 இல் கட்டி முடிக்கப்பட்டது..


அப்போது முதல் இன்று வரை இந்த அரண்மனை இன்னும் ஒரு கலாச்சார சின்னமாகவே உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்த அரண்மனை, இந்திய கைவினைத்திறன் மற்றும் மேற்கத்திய வடிவமைப்பு தத்துவங்களின் கலவையாக உள்ளது.. தொலைநோக்கு சிந்தனை உணர்வுகளுடன் வடிவமைக்கப்பட்ட இது, கேபிள் மின்சாரம், லிஃப்ட் மற்றும் மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகளின் ஆரம்பகால நிறுவல்களைக் கொண்டிருந்தது..

1878 ஆம் ஆண்டு மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III அவர்களால் இந்த அரண்மனையை கட்ட தொடங்கினார்.. எனினும் கட்டி முடிக்க 10 ஆண்டுகளுக்கும் மேலானது.. ஒரு வழியாக 11 வருட கட்டுமானத்திற்குப் பிறகு திறக்கப்பட்டது.

இந்த அரண்மனையின் கட்டிடக்கலை இந்தோ-சாராசெனிக் மற்றும் ஐரோப்பிய கூறுகளின் கலவையாகும், இதில் இஸ்லாமிய பாணி குவிமாடங்கள் மற்றும் இந்து கோவில்-ஈர்க்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. ஐரோப்பாவின் வண்ணக் கண்ணாடி வேலைப்பாடுகள், நுட்பமான பெல்ஜிய சரவிளக்குகள், இத்தாலிய மொசைக்குகள் மற்றும் கண்டம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட நுட்பமான சிற்பங்களுடன் இந்த அரண்மை தனித்து நிற்கிறது.. புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் மிகப்பெரிய அறியப்பட்ட படைப்புகள் உட்பட, இந்த அரண்மனை நுண்கலைகளுக்கும் தாயகமாக திகழ்கிறது…

அரண்மனைக்குள் உள்ள மிகவும் பிரபலமான பகுதிகளில் ஒன்று தர்பார் மண்டபம், பிரமாண்டமான பார்வையாளர் அறை. வெனிஸ் தரைகள் மற்றும் வண்ணக் கண்ணாடியுடன் கூடிய இந்த மண்டபம், அரண்மனையின் டிஎன்ஏவில் உலகளாவிய கலை பாணிகள் எவ்வாறு உள்ளன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்று லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் யார் வசிக்கிறார்கள்?

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை ராஜ வம்சத்தினரின் ஆடம்பர வீடாக உள்ளது.. பரோடாவின் தற்போதைய மகாராஜாவான சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட், அவரது மனைவி ராதிகாராஜே கெய்க்வாட், அவர்களின் மகள்கள், இளவரசிகள் பத்மஜாராஜே மற்றும் நாராயணராஜே, மற்றும் ராணி தாயார் சுபாங்கினிராஜே கெய்க்வாட் ஆகியோர் இங்கு வசித்து வருகின்றனர்..

ரூ.24,000 கோடி மதிப்புள்ள இந்த அரண்மனை அரச பாரம்பரியத்தை நவீன வாழ்க்கையுடன் கலக்கிறது. லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் 170 அறைகள், ஒரு தனியார் அருங்காட்சியகம் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானம் ஆகியவை உள்ளன, இது உலகளவில் பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி ரூ.2.5 மில்லியனும் அதிகமான செலவில் கட்டப்பட்டது.

கெய்க்வாட் குடும்பத்திடம் 1886 ஆம் ஆண்டின் முதல் மெர்சிடிஸ் பெஞ்ச் காப்புரிமை மோட்டார் வேகன், 1934 ரோல்ஸ் ராய்ஸ், 1948 பென்ட்லி மார்க் VI மற்றும் 1937 ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் III போன்ற அரிய கார்கள் உள்ளன. இந்த அரண்மனை அளவில் மிகப்பெரியது மட்டுமல்லாமல், வரலாறு மற்றும் ஆடம்பரத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் உள்ளது.

Read More : 50 கப்பல்கள்.. 20 விமானங்கள் மாயம்! பெர்முடா முக்கோணத்தின் மர்மம் ஒருவழியாக விலகியது! 300 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விடை..

RUPA

Next Post

"தம்பி மேல தான் எல்லாருக்கும் பாசம்.. அதான் அவன கொன்னுட்டேன்..!!" சின்ன பையன் செய்த பகீர் சம்பவம்..!

Tue Aug 12 , 2025
Odisha teen kills younger brother; felt sidelined, neglected by parents; buries
murder

You May Like