ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய வட்டம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார் எலக்ட்ரீசியன் ஆன இவர் கடந்த 2020 ஆம் வருடம் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
யசோதா ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர் அதன் பிறகு யசோதா படுக்கையறைக்கு சென்று உறங்கினார். மறுநாள் காலை வெகு நேரம் ஆன பின்னரும் அவர் எழுந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த லோகேஷ் அக்கம் பக்கம் உதவியுடன் வீட்டின் மேற்கூறையை பிரித்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது தன்னுடைய மனைவி தூக்கி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் யசோதாவின் உடலை இணைத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை செய்தனர் அந்த விசாரணையில் குழந்தை இல்லாத இயக்கம் காரணமாக, யசோதா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.