இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்த செய்த இளைஞர் அதிரடி கைது……! சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை கோவையில் பரபரப்பு……!

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டு, தவறாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து whatsapp மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.


அந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அந்த அந்தப் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அத்துடன் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Next Post

ஆதார் அட்டை..!! ஜூன் 14ஆம் தேதி வரை இலவசம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வெளியான அறிவிப்பு..!!

Thu Mar 16 , 2023
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளிலும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில், ஆதார் தகவல்களை இணையதளம் மூலம் கட்டணம் […]
aadhar

You May Like