அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கியமான விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி, அரசு இனி ஓய்வுபெற்றவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற பிற நிதி உதவிகளை (அகவிலைப்படி உயர்வு, புதிய ஊதியக் குழுவின் சலுகைகள்) கிடைக்காது. இனி 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அகவிலைப்படி (DA) உயர்வுகள் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், 1972ல் வந்த ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் பல்வேறு நன்மைகளை பெற்று வருகிறார்கள். ஆனால், புதிய நிதிச் சட்டம் 2025, அந்த 1972 சட்டத்தையும் புறக்கணிக்கிறது. அதாவது, அந்த பழைய சட்டத்தின் அடிப்படையில் இனிமேல் எந்த நன்மையும் கிடைக்காது. மேலும் முக்கியமாக, இந்த புதிய விதிகளை எதிர்த்துத் நீதிமன்றத்தில் சென்று முறையிட முடியாது.
ஓய்வூதியத்துறையில் ஒரு முக்கிய திருப்பமாக இருந்த 1982 உச்சநீதிமன்ற தீர்ப்பு – “ஓய்வு பெற்றவர்கள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்” என்பதைக் கூறியது. இந்தத் தீர்ப்பு ஓய்வூதியர்கள் தினமாக செப்டம்பர் 17-ல் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய நிதிச் சட்டம் இந்த தீர்ப்பை மறந்துவிட்டதாகவே பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
ஓய்வூதியர் சங்கங்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் இந்தச் சட்ட மாற்றத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “விலைவாசி அதிகரிக்கின்ற இந்தக் காலத்தில், ஓய்வூதியத்தை தடுக்கும் முடிவுகள் மோசமான நிதி சுமையாக்கும்” என்கிறார்கள். இது தொடர்பாக இன்னும் அரசாங்கத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.