திக்! திக்!… பந்துவீச்சில் மிரட்டிய பஞ்சாப்!… கடைசி ஓவரில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றிபெற்றது.


16-வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 49* ரன்களும், ஜிதேஷ் சர்மா 44 ரன்களும், ஷாரு கான் 41* ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அதன்பின், களமிறங்கிய தேவ்தட் படிக்கல், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருந்தும் படிக்கல் 30 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இதன்பின் ஹெட்மியர் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் அடிக்கும் நிலையில் 46 ரன்களுடன் வெளியேறினார். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்ற ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ரன்களும், ஜெய்ஸ்வால் 50 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மியர் 46 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் அணியில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

1newsnationuser3

Next Post

டிஜிட்டல் இந்தியா பெயரில் வேலை!... போலி கடிதம் மூலம் மோசடி!... எச்சரிக்கையா இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

Sat May 20 , 2023
டிஜிட்டல் இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, வேலை கொடுப்பதாகக் கூறி பணம் கேட்டு மோசடிகள் நடைபெற்றுவருகின்றன என்று அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சிலர் கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். மேலும், சிலர் தான் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கும் வரை வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வைத்து […]
FakeEmploymentLetter

You May Like