பெற்றோரை இழந்த சிறுமிக்கு.. உறவுக்கார இளைஞரால் அரங்கேறிய கொடூரம்.! கதறி அழும் மாணவி.!

தஞ்சாவூர் மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் இரவில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மாணவியை உறவுக்கார இளைஞன் பலாத்காரம் செய்துள்ளார்.

சுப்பிரமணியன் என்பவர் திருபுவனத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக் (30). பெற்றோரை இழந்த நிலையில் சித்தி வீட்டில் வசித்து வருகிற 17 வயது நிரம்பிய 12 ஆம் வகுப்பு படித்த மாணவியுடன் 2019 ஆண்டு கார்த்திக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அப்பெண்ணின் சித்தி இரவு நேரத்தில் பணிக்கு சென்றதால் மாணவியை கார்த்திக்கின் அக்கா வீட்டில் தங்க வைத்து விட்டு சென்றார். அச்சமயத்தில் அங்கு நள்ளிரவில் வீட்டிற்குள் வந்த கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . இதுபற்றி மாணவி சித்தியிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தி கடலூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கார்த்திக்கை உடனே கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எழிலரசி அவர்கள் கார்த்திக்குக்கு 7 வருடங்கள் ஜெயில் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து, சமூக நல துறையின் கீழ் இருக்கும் நிதியில் மாணவிக்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவளித்துள்ளார்.

Baskar

Next Post

பிக்பாஸ் வீட்டில் ஆவி..? கதறி ஓடிய தனலட்சுமி..!! திகில் கிளப்பிய அமுதவாணன்..!!

Sun Oct 30 , 2022
பிக்பாஸ் வீட்டில் காதல் இருக்கும், சண்டை இருக்கும், அழுகை இருக்கும். ஆனால், இப்போது ஆவி இருப்பதாக திகிலை கிளப்பி உள்ளார் அமுதவாணன். தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், டிவி மற்றும் இணையத்தில் பிரபலமாக உள்ள நபர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் […]
பிக்பாஸ் வீட்டில் ஆவி..? கதறி ஓடிய தனலட்சுமி..!! திகில் கிளப்பிய அமுதவாணன்..!!

You May Like