மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள் https://sss.nic.in என்ற இணையதளம் மூலமாக நாளைக்குள் (பிப்ரவரி 24 ஆம் தேதி) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு கணினி வழி தேர்வாக ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் வழக்கமாக எஸ்எஸ்சி போட்டி தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தேர்வுகள் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.