ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்.
![Income Tax..!! ஆதார் - பான் கார்டு இணைப்பு..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!! உடனே இதை செய்யுங்க..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/03/112898-pan-aadhaar.jpg)
அதற்கு முதலில் income tax துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று பார்க்கவும். அதில் இடது பக்கம் quick link என்பதில் link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஒரு புதிய பக்கத்தில் click here என்ற ஹைபர்லின்க் செய்யப்பட்ட விருப்பம் கிடைக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு புதிய பக்கத்தில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைக்கான இணைப்பு கேட்கும். அதில், தேவையான தகவல்களை உள்ளிட்டு உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.