fbpx

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்..!! வட்டி அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வங்கிகள் நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை உயர்த்திய நிலையில், அஞ்சல் துறையும் தற்போது வட்டி உயர்த்தி அறிவித்துள்ளது.

ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் வரை தாங்கள் சம்பாதித்தவற்றை நம்பிக்கையாக சேமிக்கும் இடம் ஒன்று உண்டென்றால் அது அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள் தான். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் முதல் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வங்கிகள் நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை உயர்த்தியதில் இருந்து அஞ்சல் துறையும் தற்போது வட்டி உயர்த்தி அறிவித்துள்ளது.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்..!! வட்டி அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இதில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மற்றும் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான சேமிப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனையடுத்து, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 8% வட்டியும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7% வட்டியும் இனி கிடைக்கும். மேலும், ஓராண்டு முதல் 5 ஆண்டு வரை உள்ள முதலீட்டு திட்டங்களுக்கு 1.1% வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. மாதாந்திர வருமான திட்டத்திற்கு 7.1% வட்டியும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7% வட்டியும் கிடைக்கும். தொழிலாளர்களுக்கான சேமிப்பு வைப்பு நிதியான பிபிஎஃப் மற்றும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டங்களின் வட்டி உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Chella

Next Post

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை…!

Sat Dec 31 , 2022
இயக்குனர் ஹரி இயக்கும் பல திரைப்படங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தான் படமாக்கப்படும். அந்தப் பகுதிகளில் படமாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையடையும். ஏனென்றால் கதைக்களம் முற்றிலுமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியை சார்ந்திருக்கும். அதோடு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோலத்தான் கடந்த 2013 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை […]

You May Like