தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பைசஸ் போர்டு (Spices Board) தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாகவுள்ள நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணியின் முழு விவரம்…
நிறுவனம்: ஸ்பைசஸ் போர்டு
பணியின் பெயர்: பயிற்சி ஆய்வாளர்
பணியிடங்கள்: 01
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயது நிரம்பியவர்களாக இருக்கலாம்
சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2022
விண்ணப்பிக்கும் முறை: தேர்வில் கலந்து கொள்ளும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த பணிக்கான கீழுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
முழு விவரம் அறிய… http://www.indianspices.com/opportunities/details.html?id=478