fbpx

இந்த நான்கு ராசியுடைய அண்ணன்களும், சகோதரிகளை குழந்தை போல் பார்த்துக் கொள்ளுவார்கள்.!?

பொதுவாக உறவுகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் மாற்றம் தான் மிகப்பெரும் காரணமாகும். குறிப்பாக எலியும், பூனையும் போல் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்வது இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான். ஆனால் இந்த நான்கு ராசிக்காரர்களும் அவர்களின் அக்கா மற்றும் தங்கைகளை குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களாம். இவர்கள் என்ன ராசிக்காரர்கள் தெரியுமா?

கடகம்: சந்திரனினால் ஆளப்படும் கடக ராசிகாரர்கள் பொதுவாக அவர்களின் வளர்ப்பு குணங்களையே கொண்டிருப்பார்கள். இந்த  ராசியுடைய நபருடன் ஒருவர் இருக்கும்போது மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது போன்ற உணர்வார்கள். மேலும் இந்த ராசியினர் தங்களின் சகோதரிகளை மிகுந்த பாதுகாப்புடன் குழந்தையைப் போலவும் பார்த்துக் கொள்வார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

கன்னி: பொதுவாக அனைத்து விஷயங்களிலும் பாதுகாப்பு உணர்வுடன், கவனமாகவும் இருந்து வரும் கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கு பாதுகாப்புடன் இருந்து வருவார்கள். மேலும் தங்கள் சகோதரிகளின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் அவர்களை குழந்தை போல் பாதுகாத்து வருவார்கள்.

துலாம்: நீதி மற்றும் நியாயத்திற்கு பெயர் பெற்ற துலாம் ராசிக்காரர்கள் தன்னுடன் பிறந்தவர்களை எப்போதும் பாதுகாப்புடனும், சமமாகவும் நடத்துவார்கள். தங்கள் சகோதரிகளுக்கு ஒரு வளர்ப்பு தாயாகவே இருந்து வருவார்கள்.

மீனம்:இரக்க குணம் அதிகமுள்ள மீன ராசிக்கார ஆண்கள் தங்கள் சகோதரிகளுக்காக கற்பனையான மற்றும் விசித்திரமான உலகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். மேலும் தங்கள் சகோதரிகளை மிகவும் கண்ணும், கருத்துமாக பாதுகாத்து குழந்தையை போல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

Baskar

Next Post

பத்திரிகையாளர்கள் போராட்டம்...! உங்களை யாருமே மதிக்க மாட்டாங்க...! அண்ணாமலை ஆவேசம்

Fri Jan 26 , 2024
செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு, இன்று தமிழகத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். புவனகிரி சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் அண்ணன் திருமாவளவன் கலந்துகொள்வார். போலி சமூக நீதி பேசிக் கொண்டு, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு […]

You May Like