தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாளாகும். 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.20 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதாரை இணைக்காமல் இருப்போர், பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.