fbpx

கஷ்டங்களை அழித்து நம்மை காக்கும் கணபதியின் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க.!?

பொதுவாக விநாயகரை வழிபட்டு எந்த ஒரு செயலையும் தொடங்குவது அந்த செயல் நல்லபடியாக முடியும் என்பதற்காகவே. அப்படியிருக்க மாதந்தோறும் வரும் சங்கடகர சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு குறிப்பிட்ட மந்திரங்களை சொல்வது வாழ்க்கையில் கஷ்டங்களை குறைத்து மகிழ்ச்சியை பெருக்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சங்கடகர சதுர்த்தியில் கோயில்களில் விசேஷமான பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும். அன்றைய நாட்களில் நாம் விநாயகரை வழிபடுவது நம் வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சங்கடம் என்றால் கஷ்டம் இன்றும் ஹர என்றால் அழிப்பது என்றும் பொருள்படும். சங்கடங்களை தீர்க்கும் நாளையே சங்கடஹர சதுர்த்தி என்று குறிப்பிட்டு வருகிறோம். சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்.

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய, ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய, மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது, அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா.

சங்கடகர சதுர்த்தி அன்று இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் எடுத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும், திருமணம் பேச்சு தடையின்றி நடைபெறும், வீட்டில் நிகழ்ச்சி நடைபெறும், கடன் தொல்லை தீரும், தீராத நோய்களும் தீரும், இவ்வாறு பல்வேறு நன்மைகளும் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் உடனடியாக குணமடையும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

Baskar

Next Post

நீங்கள் UTI-யால்அவதிப்படுகிறீர்களா!…வராமல் தடுப்பது எப்படி!…

Sun Feb 4 , 2024
UTI(Urinary Tract Infection)என்பது சிறுநீர் பாதை தொற்று ஆகும். இந்த காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் முதல் ஆண்கள்,பெண்கள் என அனைவருமே இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை வராமல் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் நம் உடலில் இல்லாததால் தான். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் பாதையில் எரிச்சளுடன் வலியை உணர்தல் போன்று இருந்தால் உடனடியாக […]

You May Like