பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 30ஆம் தேதி அன்று தேவர் ஜெயந்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமூகத்தினரால் இந்த நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகத் தலைவரின் பிறந்தநாள் குரு பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 20ஆம் நூற்றாண்டு தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக இருந்தார்.
யார் இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்?
பசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராம்நாடு மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் பிறந்தார். அவர் ஒரு சோசலிஸ்ட் மற்றும் சுபாஷ் சந்திர போஸின் சக ஊழியர். அவர் 1952 முதல் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் (AIFB) தேசிய துணைத் தலைவராக பணியாற்றினார். அவர் தேசிய நாடாளுமன்றத் தொகுதிக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 30, 1963 அன்று மதுரை திருநகரில் காலமானார். தேவர் பிறந்த தேதியும் இறந்த தேதியும் ஒன்றாக இருப்பது உள்ளது.
தென்தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நாளடைவில் தமிழக அரசியலை தாண்டி இந்திய அரசியலில் முக்கிய நிகழ்வாகவே மாறிப்போனது. கடந்த 1969ம் ஆண்டு குடியரசு தலைவா் தேர்தலில் வி.வி.கிரி வெற்றி பெற்று தேசிய அரசியலில் இந்திரா காந்தியின் கை ஓங்கியபோது கோரிப்பாளையத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ஒத்துழைப்புடன் தேவருக்கு பெரிய சிலையை மூக்கையாத் தேவர் அமைத்தார்.
இதையடுத்து வி.வி.கிரியை அழைத்து தனது முன்னிலையில் தேவா் சிலையை திறந்துவைத்து தேவா் ஜெயந்தி கலாசாரத்தை உருவாக்கி முக்குலத்தோர் வாக்குகளை தனக்கு சாதகமாக திருப்ப முயன்றார் கருணாநிதி. கடந்த 1991க்கு பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவின் தோழி என்கிற அடிப்படையில் சசிகலாவின் கை ஓங்கியதால் முக்குலத்து மக்கள் பெரும்பாலானோா் அதிமுகவுக்கு ஆதரவாக மாறினர். இதற்கு நன்றிக் கடனாகவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு 13 கிலோ தங்கக்கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கினார்.
தேவர் சன்னதி
தேவர் சொந்த ஊர் பசும்பொன் ஆகும். தேவர் ஜெயந்தியின் முக்கிய கொண்டாட்டங்கள் மதுரையிலிருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ள அவரது சமாதியில் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு 116-வது தேவர் ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக தலைவர்கள் நேரடியாக அவரது உருவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்