வன்முறையை தூண்டி குளிர்காயும் பாஜக.? ஒத்துஊதும் ஆளுநர்.. பகீர் குற்றச்சாட்டு.!

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி ஒன்று திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கோயம்புத்தூரில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த அரசியல் ஆதாயம் பெறுகின்ற நோக்கில் ஆளுநரும் பாஜகவும் செயல்பட்டு வருவது அதிர்ச்சியாக இருக்கிறது.


திமுக ஆட்சிக்கு எதிரான நபராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அவர் ஆளுநர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்பட்டு வருகிறார்.

அரசு விழாக்கள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் சென்று ஆன்மீகம், அரசியல் என்று பேசுகிறார். மதவாதத்தை தூண்டுகிறார். மற்றும் திமுக அரசிற்கு எதிரான வகையில் அவதூறுகளை பரப்பி வருகின்றார்.

பாஜக வட மாநிலங்களைப் போல வன்முறையை தூண்டி தமிழகத்திலும் குளிர் காய நினைக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கிறது. மாநில அரசின் பல்வேறு உரிமைகளில் தலையிடுகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

1newsnationuser5

Next Post

வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயருகிறது..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Nov 1 , 2022
ரெப்போ ரேட் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் மீண்டும் ரெப்போ வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு […]
home loan

You May Like